தனியார் சுகாதார சேவை ஒழுங்குபடுத்தும் சபை: சட்டமூலத்தில் திருத்தம் கொண்டுவர நடவடிக்கை

205 0

தனியார் சுகாதார சேவைகளை ஒழுங்குபடுத்தும் சபையை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தை சீர்திருத்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பாக மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த குழுவின் அறிக்கை ஒரு மாதத்தில் அமைச்சருக்கு வழங்கப்படவுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையிலான இந்த குழுவில் தனியார் மருத்துவமனை ஒழுங்குபடுத்தல் பணிப்பாளர் மற்றும் சுகாதார அமைச்சின் சட்டப் பணிப்பாளர் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

பிரித்தானிய அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்டுள்ள தனியார் சுகாதார சேவைகளை ஒழுங்குபடுத்தும் சபையின் அறிக்கையை கருத்தில் கொண்டு இந்த சட்டமூலத்தை திருத்துமாறு சுகாதார அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.