கிளிநொச்சி மக்களின் போராட்டம் இன்று 27வது நாளாகவும் தொடர்கின்றது.

253 0

கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்களின் போராட்டம் இன்று 27வது நாளாகவும் தொடர்கின்றது.

தமது குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும் அடிப்படை வசதிகள், நிரந்தர வீட்டுத் திட்டம் என்பன இதுவரை கிடைக்கவில்லை.

இத்தனை காலமும் அடிப்படை உரிமை இல்லாத மக்களாக வாழ்ந்து விட்ட தமக்கு இனியும் அவ்வாறு வாழ முடியாது என தெரிவித்து அவர்கள் இந்த போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இந்தநிலையில், தமக்கான காணி உரிமம் கிடைக்கும் வரை தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.