புதுவருட காலத்தின் போது பல்வேறு விபத்துகளில் சிக்கி 665 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவமனையில் நிறைவேற்று பணிப்பாளர் அனில் ஜயசிங்க இந்த தகவலை தெரிவித்தார்.
எவ்வாறாயினும் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தில் விபத்துக்களின் எண்ணிக்கை பாரியளவில் குறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்ம 13ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரையிலான மூன்று நாட்களில் இடம்பெற்ற விபத்துகளில் சிக்கிய 261 பேர் தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் பணிப்பாளர் அனில் ஜயசிங்க குறிப்பிட்டார்.