ருஹூணு பல்கலைக்கழகம் இன்று திறப்பு

201 0

மூடப்பட்டிருந்த ருஹூணு பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் இன்று திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக உபவேந்தர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

ஒருவகை தொற்று காரணமாக ருஹூணு பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் அண்மையில் மூடப்பட்டிது.

இந்த நிலையில், இன்று முதல் திறக்கப்படும் பல்கலைக்கழகத்தின் அனைத்து செயற்பாடுகளும் வழமைபோல் இயங்கும் என உபவேந்தர் அறிவித்துள்ளார்.

இதனிடையே, மூடப்பட்டிருந்த பேராதெனிய பல்கலைக்கழகமும் நாளை முதல் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவுள்ளது.

பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் உபுல் திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

பரவிவந்த ஒருவகை காய்ச்சல் காரணமாக பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் கடந்த 3 ஆம் திகதி முதல் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.