தர்மலிங்கம் பிரதாபனின் சைக்கிள் பயணம் இன்று மட்டக்களப்பை….(காணொளி)

338 0

இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகள் அனைவருக்கும் ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் இலங்கையை சைக்கிளில் சுற்றிவரும் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

தர்மலிங்கம் பிரதாபனின் சைக்கிள் பயணம் மட்டக்களப்பு நகரை இன்று சென்றடைந்தபோது, அவரை வரவேற்கும் நிகழ்வு மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் நடைபெற்றது.

மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் பிரதிநிதிகளும், எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் பிரதிநிதிகளும், மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் பொருளாளர் வி.ரஞ்சிதமூர்த்தி மற்றும் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தலைவர் ஓ.கே.குணநாதன் ஆகியோர் இவருக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர்.

இதனை தொடர்ந்து இவரது சைக்கிள் பயணம் திருகோணமலை நகரை நோக்கி பயணிக்கவுள்ளது.