ஊர்காவற்றுறை மரியாள் தேவாலயத்தின் நீர் சுத்திகரிப்பு நிலையம் இன்று திறந்து வைப்பு(காணொளி)

295 0

யாழ்ப்பாணம் தீவகம் ஊர்காவற்றுறை மரியாள் தேவாலயத்தின் நீர் சுத்திகரிப்பு நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறை மரியாள் தேவாலயத்தில் கடற்படையினால் அமைக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தை யாழ்.மறைவாட்ட ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும் வடக்கு கடற்படைத்தளபதி ஜெ.ஜெ.சில்வா ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.

யாழ்.மறைவாட்ட ஆயரின் வேண்டுகோளிற்கிணங்க கடற்படையின் சமூக சேவை நிதித்திட்டத்தில் அமைக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் மக்களின் பாவனைக்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சுத்திகரிப்பு நிலையத்திற்கான பெயர்ப் பலகையை யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை திரைநீக்கம் செய்து வைத்தார்.

நீர் சுத்திகரிப்பு நிலையத்தை வடக்கு கடற்படைத்தளபதி ஜெ.ஜெ.சில்வா நாடாவை வெட்டி திறந்து வைத்தார்.

நிகழ்வு மாணவர்களின் பான்ட் வாத்திய அணிவகுப்பு மரியாதையுடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நீர் சுத்திகரிப்பு நிலையத்திறப்பு விழாவில் ஆலய பங்கு மக்கள், கடற்படை அதிகாரிகள் அருட்தந்தையர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.