மீத்தொட்டமுல்ல குப்பை மேடு சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக..(காணொளி)

347 0

மீத்தொட்டமுல்ல குப்பை மேடு சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

கொலன்னாவ, மீத்தொட்டமுல்ல பிரதேசத்திலுள்ள குப்பை மேடு சரிந்து விழுந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 23 ஆக உயர்வடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இராணுவத்தினர் தொடர்ந்தும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொலன்னாவ – மீதொட்டமுல்ல பகுதியில் இருந்து 130 குடும்பங்களை வெளியேறுமாறு தேசிய கட்டடங்கள் ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

கொலன்னாவ – மீதொட்டமுல்ல பகுதியில் குப்பை மேடு சரிவால் பலர் உயிரிழந்ததை அடுத்து மீதொட்டமுல்ல பகுதியில் இருந்து மேலும் பலரை வெளியேறுமாறு தேசிய கட்டிடங்கள் ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

மீதொட்டமுல்ல பகுதியில் அபாயத்துக்கு உள்ளாகியுள்ளதால் அங்கு வசிக்கும் 130 குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மீதொட்டமுல்லை குப்பை மேடு சரிவால் இதுவரை 23பேர் உயிரிழந்துள்ள நிலையில், அப்பகுதியில் அமைந்துள்ள குப்பை மேட்டை வேறு இரண்டு இடங்களுக்கு மாற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.