புதுவருடத்திற்காக தமது சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள், மீண்டும் திரும்புவதற்காக எதிர்வரும் சில தினங்களுக்கு விசேட தொடரூந்துகள் பல சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இலங்கை தொடரூந்து திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கு அமைய நாளைய தினம் முதல் அலுவலக பணியாளர்களுக்கும் வழமையான சேவை வழங்கப்படும் என தொடரூந்து பிரதி முகாமையாளர் பி.பீ.ஏ. ஆரியரட்ன தெரிவித்துள்ளார்.
இதனிடையே தலைநகரம் வரும் பொதுமக்களின் நலன் கருதி விசேட பயணிகள் போரூந்துக்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பீ. ஹேமசந்திர எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
இதனிடையே, பொது மக்களுக்கான சகல ஒழுங்குகளையும் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன எமது செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

