தந்தை செல்வாவின் நினைவு தினம் எதிர்வரும் 26 ம் திகதி யாழில் இடம்பெறவுள்ளது

239 0
தந்தை செல்வாவின் நினைவு தினத்தினை முன்னிட்டு இம்முறை தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் தலைவர் பேராயர் ஜெபநேசன் தலமையில் யாழில்  இடம்பெறும்.
நிகழ்வின் சிறப்பு பேச்சாளராக ஜெயம்பதி விக்ரமரட்னா கலந்து கொள்ளவுள்ளார்.
தந்தை செல்வாவின் சிறார்த்த தின நிகழ்வுகள் எதிர்வரும் 26ம் திகதி யாழ். நகரின் பிரதான நூலகம் அருகில் உள்ள தந்தை செல்வா சதுக்கம் அமைந்துள்ள வளாகத்தினில் இடம்பெறவுள்ளது. இவ்வாறு இடம்பெறும் நிகழ்வுகள் தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் தலைவர் பேராயர் ஜெபநேசன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இவ்வாறு இடம்பெறும் நிகழ்வில்  கலந்து கொள்ளும் கலாநிதி   ஜெயம்பதி விக்ரமரட்னா நினைவுரை  ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.