பதவிகளை இழக்கப் போகும் மகிந்த ஆதரவு எம்.பிக்கள்!

201 0

கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அவர்கள் வகித்து வரும் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.

இவர்கள் அடுத்த வாரம் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்கப்படுவார்கள் என உயர்மட்ட அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சமல் ராஜபக்ச, குமார வெல்கம, மகிந்தானந்த அளுத்கமகே, ஜானக்க பண்டார தென்னகோன், லொஹான் ரத்வத்தே, ரஞ்சித் சொய்சா ஆகிய 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களாக பதவி வகித்து வருகின்றனர்.

இவர்களை தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்கி விட்டு புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சுமார் 20 பேர் ஏற்கனவே தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.