மீதொட்டுமுல்ல அனர்த்தம் – உயிரிழப்பு 23ஆக உயரவு

222 0

கொலன்னாவ மீதொட்டுமூல்ல குப்பை மேடு சரிந்து விழுந்த அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளன.

வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் சிக்கி இதுவரை 23 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தின் பின்னர் அந்த பகுதியை சேர்ந்த சிலர் காணாமல் போயுள்ள நிலையில் கட்டட இடிபாடுகளுக்குள் இவர்கள் சிக்கியிருக்கலாம் என கருதப்படுவதாக உறவினர்கள் கருதுகின்றனர்.

மீட்பு பணிகளில் முப்படையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளன.

சுமார் 600 படைவீரர்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

145 மக்கள் குடியிருப்புகள் குப்பை மேட்டினால் மூடப்பட்ட நிலையில் முழுமையாகவும் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன.

குடியிருப்புகளில் வசித்த 180 குடும்பங்களை சேர்ந்த சுமார் 625 பேர் இரு பாடசாலை கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.