அம்பலந்தொட்டையில் துப்பாக்கிச் சூட்டு – ஒருவர் பலி, 3 பேர் காயம்

221 0

அம்பலந்தொட்டை – மாமடல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் மேலும் மூவர் காயமடைந்தனர்.

மாமடல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விருந்துபசாரமொன்றின் போது உந்துருளியில் வந்த சிலர் இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் அம்பலந்தொட்டை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.