பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தில் அதர்மம் – இன்று 4 மாதங்களுக்கே ஆட்சி

231 0

பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம், அதர்மமான அரசாங்கம் என ஒன்றிணைந்த எதிர்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸவுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிக்கும் வகையில் தங்காலை கால்டன் இல்லத்திற்கு சென்ற பிரசன்ன ரணதுங்க இதனை குறிப்பிட்டார்.

பொய் கூறி ஆட்சிக்கு வந்த இந்த அதர்ம அரசாங்க காலத்திலேயே பல அனர்த்தங்கள் இடம்பெறுகின்றன.

இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கே மக்கள் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.

இந்த அரசாங்கம் இன்னும் 4 மாதங்களுக்கே ஆட்சியில் இருக்கும் எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.