வவுனியா பூந்தோட்டம் வீதியில் இன்று காலை உழவு இயந்திரத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்தார்.
பூந்தோட்டம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி சென்ற முற்சக்கர வண்டியின் முன் சில்லு உடைந்ததால் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி எதிரில் வந்த உழவு இயந்திரத்துடனும் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டியின் சாரதி காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தை அடுத்து பூந்தோட்டம் வீதியில் போக்குவரத்து சிலமணி நேரம் தடைப்பட்டிருந்தது.