கிளிநொச்சியில் ஊடக கலை கலாசார அமையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு (காணொளி)

329 0

கிளிநொச்சியில் ஊடக கலை கலாசார அமையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு சர்வமத பிரார்த்தனையுடன் இன்று நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் பணியாற்றிவரும் முழுநேர மற்றும் பகுதி நேர ஊடகவியலாளர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையிலும் அவர்களது உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் வகையில் ஊடக கலை கலாசார அமையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

அமையத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான வே.கஜன் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் பிரதமகுரு, பங்குத்தந்தை, மௌலவி ஆகியோரின் ஆசீர்வாதத்துடன் அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்;டுள்ளது,

ஊடகவியலாளர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் வகையிலும் நாட்டின் பல பாகங்களிலும் உரிமைக்காக போராடுகின்ற ஊடக அமைப்புக்களுடன் ஒற்றுமையை கட்டியெழுப்பும் வகையிலும் இம்மையம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அமையத்தில் தலைவராக மூத்த ஊடகவியலாளர்;களில் ஒருவரான வே.கஜனும், செயலாளராக ஊடகவியலாளர் க.ரவீந்திரராசாவும், பொருளாளராக ஊடகவியலாளர் அருள் ஜோன்சனும் தெரிவு செய்யப்பட்;டுள்ளதுடன், ஏனைய நிர்வாக உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.