மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 54 ஆவது நாளாகவும் போராட்டத்தில்…(காணொளி)

274 0

 

அரசாங்கம் பாதுகாப்புக்காகவும், வெளிநாட்டு சுற்றுப் பயணங்களுக்காகவும் செலவிடும் பணங்களில் ஒரு பகுதியை தமது தொழில் வாய்ப்புக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 54வது நாளாக இன்றும் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமக்கான நியமனங்களை வழங்குவதற்கு மத்திய மாகாண அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் பட்டதாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் புதுவருடம் உட்பட கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்களின் பல்வேறு நிகழ்வுகளில் தாங்கள் சந்தோசமான நிலையில் பங்குபற்ற முடியாத நிலையில் வீதிகளில் இருப்பதாகவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் தமது நியாயமான கோரிக்கையினை வென்றெடுப்பதற்கு தமிழ் அரசியல்வாதிகள் அழுத்தங்களை வழங்காதது கவலையளிப்பதாகவும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்றட்ட பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.