தமிழ் தேசிய கூட்டமைப்பு – ஜனாதிபதி பேச்சுவார்த்தை பிற்போடல்

244 0

ஜனாதிபதிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குமான சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வாரம் குறித்த சந்திப்பு இடம்பெறும் என்று கூறப்பட்டிருந்தது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இந்த தகவலை வெளியிட்டிருந்தார்.

ஆனால் புத்தாண்டுக்குப் பின்னர் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காணி விடுவிப்பு, காணாமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் விவகாரங்கள் தொடர்பில் இதன்போது பேசப்படவிருந்தது.