மீதொட்டுமுல்ல அனர்த்தம் – கொழும்பில் குப்பைகள் தேங்கும் அவதான நிலை

220 0

மீதொட்டுமுல்ல பிரதேசத்தில் குப்பை மேடு சரிந்து விபத்துக்கு உள்ளானதினால் கொழும்பில் குப்பைகள் தேங்கும் அவதான நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான தீர்மானங்களை மேற்கொள்வதற்காக இன்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் வீ.கே, ஏ அனுர குறிப்பிட்டுள்ளார்.

இந்த கலந்துரையாடலின் பின்னர் குப்பைகள் அகற்றுவது தொடர்பில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குப்பைகூலங்களை அகற்றுவதற்கான மாற்றுதெரிவொன்றை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக அமைச்சர் பைசர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.