மஹிந்த ராஜபக் ஷ எடுக்கும் எந்த முயற்சிகளாலும் தற்போதைய அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளை தடுத்து விட முடியாது

362 0

33மஹிந்த ராஜபக் ஷ எடுக்கும் எந்த முயற்­சி­க­ளாலும் தற்­போ­தைய அர­சாங்­கத்தின் நல்­லி­ணக்க செயற்­பா­டு­களை தடுத்து விட முடி­யாது. அவரின் குந்­த­க­மான செயற்­பா­டு­க­ளுக்கு சிங்­கள மக்கள் உடன்­ப­டப்­போ­வ­து­மில்லை என்று தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ. சுமந்­திரன் தெரி­வித்தார்.

தேசிய அர­சாங்­கத்­துக்கு எதி­ராக கூட்டு எதிர்க்­கட்­சியின் எதிர்ப்பு ஊர்­வலம் எதிர்­வரும் 28 ஆம் திகதி கண்­டி­யி­லி­ருந்து ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள நிலை­யில்­ மேற்­படிபாத­யாத்­தி­ரை­யினால் தற்­போ­தைய அர­சாங்­கத்­துக்கு நெருக்­கடி நிலை ஏற்­ப­டுமா? அரசு மேற்­கொண்­டு­வரும் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு விவ­கா­ரத்­துக்கு பங்கம் ஏற்­ப­டுமா? என அவ­ரிடம் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரி­விக்கையில், முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ கடந்த ஜன­வரி 8 ஆம் திகதி நடை­பெற்ற புரட்­சி­யுடன் துரத்தி அடிக்­கப்­பட்ட பின் மீண்டும் ஆட்­சியைக் கைப்­பற்றி பத­விக்கு வர பல்­வேறு பிர­யத்­த­னங்­களை மேற்­கொண்டு வரு­கின்றார் என்­பது உல­க­றிந்த விட­ய­மாகும்.இந்த முயற்­சியின் ஒரு அங்­கமே மஹிந்­தவும் அவ­ரது அணி­யி­னரும் எதிர்­வரும் 28 ஆம் திகதி மேற்­கொண்ட பாத­யாத்­தி­ரையை மேற்­கொள்ளும் முயற்­சி­யாகும். தற்­பொ­ழுது அவர் என்ன கூறு­கின்றார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் வெற்­றிக்கு சிங்­கள மக்கள் வாக்­க­ளிக்­க­வில்லை. ஈழ மக்கள் வாக்­க­ளித்­ததன் கார­ண­மா­கவே அவர் வெற்றி பெற்றார்.

அவ்­வாறு இல்­லை­யாயின் அவர் வெற்றி பெற்­றி­ருக்க முடி­யாது என்­றெல்லாம் கூறிக்­கொண்­டி­ருக்­கின்றார். இது அவரின் ஆற்­றா­மை­யையே எடுத்துக் காட்­டு­கி­றது. மஹிந்த இந்த அரசை வீழ்ச்­சி­ய­டைய செய்­வ­தற்­காக பல முயற்­சி­க­ளையும் கைங்­க­ரி­யங்­க­ளையும் செய்­து­கொ­ளண்­டுதான் இருக்­கின்றார். அது எது­வுமே பல­ன­ளிப்­ப­தா­க­வில்லை. காரணம் சிங்­கள மக்கள் இவரின் எதிர்ப்­பி­ர­சா­ரத்­துக்கு பலி­போ­க­வில்­லை­யென்­பதே உண்மை.

எனவே தான் மஹிந்த ராஜபக் ஷ மேற்­கொள்ளும் பாத­யாத்­திரை முயற்­சியும் தோல்­வி­யி­லேயே முடியும். இதில் அவர் எதை­யுமே சாதிக்க முடி­யாத நிலையே ஏற்­படும்.அர­சியல் சாசன ஆக்க முயற்­சிகள் தடை­யின்றி சுமூ­க­மாக நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கி­றது. மஹிந்­தவின் பாத­யாத்­திரை எதிர்ப்பு நிலை­களால் அர­சியல் சாசன முன்­னெ­டுப்­பு­க­ளுக்கு பங்கம் ஏற்­ப­டு­மென்று கூறி­வி­ட­மு­டி­யாது.புதிய அர­சியல் சாச­னத்தை நிறை­வேற்­று­வ­தற்கு பாரா­ளு­மன்றில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை தேவை­யென்­பது பொது­வான நியதி.

அது­மட்­டு­மன்றி சர்­வ­சன வாக்­கெ­டுப்­புக்கு விடப்­பட்டு அபிப்­பி­ராயம் பெறப்­பட வேண்­டு­மென்­பதும் தேவை­யான விட­யமே. அவ்­வி­ட­யத்தில் பாரா­ளு­மன்­றிலும் இலங்கை மக்­க­ளி­டமும் பூரண ஆத­ரவு கிடைக்கும் என்ற நம்­பிக்­கையின் பேரி­லேயே அர­சாங்­கத்தின் அர­சியல் சாசன முன்­னெ­டுப்­புகள் நடை­பெற்று வரு­கின்­றன. இதில் சந்­தே­கப்­பட வேண்­டிய விடயம் ஏது­மில்லை. ஆனால் இம்­மு­யற்­சி­களை குழப்­பு­வ­தற்கு தன்­னா­லான முழு முயற்­சி­க­ளையும் மஹிந்த ராஜபக் ஷ மேற்­கொள்­வா­ரென்­பது நாம் அறிந்துக் கொள்­ளக்­கூ­டிய உண்­மைதான்.

அவர் ஒவ்­வொரு தட­வையும் இத்­த­கைய முயற்­சி­களை மேற்­கொண்­டுதான் வரு­கிறார். அதற்­காக நாம் பயந்து கொண்­டி­ருப்­பதில் அர்த்­த­மில்­லை­யென்றே எண்­ணு­கின்றேன்.புதிய அர­சியல் சாசன நிறை­வேற்றம் நாம் எதிர்ப்­பார்ப்­பது போல் குறித்த கால எல்­லைக்குள் நிறை­வேற்­றப்­ப­டு­மென்ற நம்­பிக்கை இன்­று­வரை எமக்கு இருக்­கி­றது. நிறை­வேற்­று­வ­துதான் முக்­கி­யமே தவிர அது எக்­கா­லப்­ப­கு­திக்குள் நிறை­வேற்­றப்­பட வேண்டும் என்­பது முக்­கி­ய­மில்லை.

அரசு மற்றும் எமது கணிப்­பின்­படி எதிர்­வரும் வரவு செலவுத் திட்டம் பாரா­ளு­மன்­றுக்கு வருவதற்கு முன் புதிய அரசியல் சாசனம் நிறைவேற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்புடன் தான் அரசியல் சாசன ஆக்கப்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதுவரை எவ்வித குறுக்கீடுகளுமின்றி அரசியல் சாசன வரைபு நடைபெற்றுக் கொண்டிருக்கிறதென்றே நம்பப்படுகிறது. இதற்கு எந்த தடையீடுகள் வந்தாலும் அதற்கு முகங்கொடுத்து அரசு முன்னெடுத்துச் செல்லுமென்றே நம்புகின்றோமென சுமந்திரன் தெரிவித்தார்.