தமிழ் சிங்கள புதுவருட கொண்டாட்டங்கள் – பட்டாசுகளை கொளுத்துபவர்கள் அவதானம்

286 0

தமிழ் சிங்கள புதுவருட கொண்டாட்டங்களின் போது பட்டாசுகளை கொளுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய மருத்துவமனையின் திடீர் விபத்து பிரிவு பயிற்சி வழங்கும் தாதி அதிகாரி புஷ்பா ரம்யானி இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

பட்டாசு கொளுத்தும் போது உரிய பாதுகாப்பு முறைமைகளை பின்பற்றுமாறு அவர் கோரியுள்ளார்.

தேவையற்ற பிரச்சினை மற்றும் மதுபாவனை குறைப்பு போன்ற செயற்பாடுகள் மூலம் திடீர் விபத்துக்களை தவிர்த்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.