சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்

228 0

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட எரிஸ் 13 கப்பலில் இருந்த இலங்கையர்கள் குழு நாட்டை வந்தடைந்துள்ளனர்.

நேற்று மாலை டோஹாவில் இருந்து வந்த விமானம் ஒன்றில் அவர்கள் நாட்டுக்கு வந்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார். கடந்த மார்ச் மாதம் 13ம் திகதி சோமாலிய கடற்கொள்ளையர்களால் 08 இலங்கையர்களுடன் எரிஸ் 13 என்ற கப்பல் கடத்தப்பட்டிருந்தது. பின்னர் இலங்கை அரசாங்கத்தின் தலையீட்டுடன் புட்லண்ட பாதுகாப்பு பிரிவினரால் கப்பலும் அதில் இருந்த இலங்கையர்களும் விடுவிக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு விடிவிக்கப்பட்ட இலங்கையர்கள் அனைவரும் நேற்று மாலை இலங்கையை வந்தடைந்துள்ளனர்.