17 ஆவது நாளா­க தொடரும் முசலி மக்களின் போ­ராட்டம்

408 0

ஜனா­தி­ப­தியால் மார்ச் மாதம் 24 ஆம் திகதி வெளியி­டப்­பட்ட வன பாது­காப்பு பிர­க­டன வர்த்­த­மா­னியை இரத்துச் செய்­யக்­கோரி கடந்த 28 ஆம் திகதி ஆரம்­ப­மான முசலி மக்­களின் சத்­தி­யாக்­கி­ர­கப்­போ­ராட்டம் 17 ஆவது நாளா­கவும் இன்று தொடர்­கி­றது.

மறிச்­சுக்­கட்டி தக்­கியா பள்­ளி­வா­ச­லுக்கு முன்னால் முசலி பிர­தே­சத்தைச் சேர்ந்த மக்கள் தமது கோரிக்­கை­க­ளுக்கு ஜனா­தி­பதி செவி சாய்க்­கும்­வரை சத்­தி­யாக்­கி­ரகப் போராட்­டத்தில் தொடர்ந்தும் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.

மறிச்­சுக்­கட்டி, பாலக்­குழி, கர­டிக்­குழி மற்றும் ஹுனைஸ் நகர், கொண்­டச்சி, அகத்தி முறிப்பு, வேப்­பங்­குளம், பொற்­கேணி ஆகிய கிராம மக்கள் இப்­போ­ராட்­டத்தில் பங்கு கொண்­டுள்­ளனர்.

அகில இலங்கை மக்­கள் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரிஷாத் பதி­யுதீன் அப்­ப­கு­திக்­கு சென்று அம்­மக்­களின் போராட்­டத்­திற்கு ஆத­ரவு தெரி­வித்து வரு­கின்றார்.

அத்­துடன் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எச்.எம்.நவ­வியும் முசலி மக்­களின் போராட்­டத்தில் கலந்­து­கொண்டார். தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அசாத் சாலியும் அங்கு சென்­றி­ருந்தார்.

முஸ்லிம் காங்­கிரஸ் தேசியப் பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எச்.எம்.சல்மான் மற்றும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹுனைஸ் பாரூக் ஆகி­யோரும் நேற்­று­முன்­தினம் மறிச்­சிக்­கட்­டிக்கு சென்று மக்­களின் போராட்­டத்தில் கலந்­து­கொண்­ட­தோடு அவர்­களின் போராட்­டத்தை வலு­வூட்­டு­வ­தற்­கான ஆலோ­ச­னை­க­ளையும் வழங்­கினர்.

இதே­வேளை, நேற்­று­முன்­தினம் ஐக்­கிய தேசி­யக்­கட்சி மேல் மாகாண சபை மற்றும் மத்­திய மாகாண சபை உறுப்­பி­னர்கள் முசலி மக்­களின் போராட்­டத்­திற்கு ஆத­ரவளிக்க அங்கு சென்­றி­ருந்­தனர்.

மத்­திய மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான ஜே.ஜெய்­னு­லாப்தீன் (லாபிர் ஹாஜியார்), ஹிதாயத் சத்தார் மற்றும் மாத்­தளை மாவட்­டத்தை சேர்ந்த மாகாண சபை உறுப்­பினர் இப்­றாஹிம் ஆகி­யோரும் மேல் மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான இப்­திகார் ஜெமீல் மற்றும் எம்.எஸ்.எம்.பைரூஸ் ஆகி­யோரும் அங்கு சென்று மக்­களின் போராட்­டத்­திற்கு ஆத­ரவு தெரி­வித்­தி­ருந்­தனர்.

அத்­துடன் மறிச்­சிக்­கட்­டியில் கைவி­டப்­பட்ட பழைய கட்­ட­டங்கள் மற்றும் தற்­போது அமைக்­கப்­பட்­டி­ருக்கும் புதிய வீடுகள் என்­ப­வற்­றையும் பார்­வை­யிட்­டனர்.

இதே­வேளை, ஐக்­கிய தேசியக் கட்­சியின் பெரும்­பான்­மை­யின பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் குழு ஒன்று சித்­திரை புது­வ­ரு­டத்தை தொடர்ந்து அங்கு செல்­ல­வி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இது இவ்­வாறி­ருக்க அர­சாங்­கத்தின் வனத்­து­றைக்கு பொறுப்­பான அமைச்­சர்­களும் மீள்­கு­டி­யேற்­றத்­துக்கு பொறுப்­பான அமைச்­சரும் இவ்­வி­ட­யத்தில் தொடர்ந்தும் கரி­ச­னை­யின்றி அம்­மக்­களை புறக்­க­ணித்து வரு­வ­தாக ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்ட மக்கள் குற்றம் சுமத்தி வரு­கின்­றனர்.

அத்துடன் ஜனாதிபதி வர்த்தமானியில் கையொப்பமிட்டதுபோல் எமது போராட்டத்தை முடித்து வைக்க இவ்விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு தமக்கு நியாயம் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அத்துடன் நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனர்