இலங்கைப் பெண்ணை கொன்ற அமெரிக்கருக்கு சிறை

397 0

jail 6654dஇலங்கையைச் சேர்ந்த தமது மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்கர் ஒருவருக்கு சவுதி அரேபியாவில் 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

‘அராப் நியூஸ்’ செய்திச் சேவை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட மனைவியின் சடலத்தை 8 மாதங்களாக குழாய் ஒன்றிற்குள் மறைத்து வைத்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாரிய எரிபொருள் நிறுவனம் ஒன்றின் பணியாளர்கள் குழாய் பொருத்தலுக்கான பணியில் ஈடுபட்டபோது, குறித்த பெண்ணின் சடலத்தை அழுகிய நிலையில் மீட்டனர்.

இதனையடுத்து உரிய அதிகாரிகளுக்கு விடயம் கொண்டு செல்லப்பட்டதனை அடுத்து, குறித்த அமெரிக்க பிரஜை கைது செய்யப்பட்டார்.