தெஹிவளை நகரில் உணவகம் ஒன்றில் நேற்று இரவு தீ பரவியுள்ளது.
குறித்த உணவகத்தில் 3வது மாடியில் தீ பரவியதாக காவற்துறை தெரிவித்துள்ளது.பின்னர் பிரதேச மக்கள் காவற்துறை மற்றும் தீயணைப்பு பிரிவு இணைந்து தீயை அணைத்துள்ளனர்.
இந்நிலையில் உணவகத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
தீ பரவலுக்கான காரணங்கள் இதுவரையில் அறியப்படாததுடன் காவற்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.