மாணிக்க கங்கையில் உள்ள முதலைகளை பிடிக்க ஆலோசனை

897 0

மாணிக்க கங்கையில் சஞ்சாரிக்கும் முதலைகளை பிடிப்பதற்கு சகல பிரிவினருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக வன ஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரமபெரேரா தெரிவித்துள்ளார்.

மாணிக்க கங்கையில் உள்ள 15 முதலைகளை பிடித்து உடவலவ மற்றும் யால பூங்காக்களில் விடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் மேலும் 20 முதலைகள் வரையில் மாணிக்க கங்கையில் சஞ்சரிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதனிடையே, முதலைகளிடம் இருந்து பாதுகாப்பு பெற, மாணிக்க கங்கையில் மக்கள் நிராடுவதற்கொன தனியான இடங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் காமினி ஜயவிக்ரமபெரேரா குறிப்பிட்டார்.