பாகிஸ்தானில், இந்தியர் ஒருவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் எத்தகைய அச்சுறுத்தலுக்கும் தாம் முகம் கொடுக்க தயார் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
அண்மையில் பாகிஸ்தானில் இந்தியார் ஒருவருக்கு துக்கு தண்டனை வழக்கப்பட்டது.
இதற்கு இந்தியா தமது கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், எந்தவகையான பிரச்சினை வந்தாலும் பதிலடி கொடுக்க தமது ராணுவம் தயார்நிலையில் உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானின் ஆயுதப்படைகள் மீது நாடு, முழு நம்பிக்கை வைத்துள்ளது.
நவீனகால சவால்களை சந்திக்கும் வகையில், ராணுவத்துக்கு ஆயுத பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது எனவும் பாகிஸ்தான் பிரதமர் குறிப்பிட்டார்.