சுதந்திர கட்சியின் அமைப்பாளர் மக்களின் ஆதரவை பெற்றிருக்க வேண்டும் – மஹிந்த

240 0

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளராக எவரை தேர்வு செய்தாலும் அவர் மக்களின் ஆதரவை பெற்றிருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தெபரவௌ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த மஹிந்த, அரசாங்கத்திடம் எதிர்காலம் குறித்த திட்டம் இல்லை என குறிப்பிட்டார்.
பண்டிகைக்காலங்களில் பொருட்களின் விலையானது அதிகரித்து காணப்படுகின்றது.
மரக்கறிகளின் விலை நூற்றுக்கு 50 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது சுட்டிக்காட்டினார்.