விமல் வீரவன்ச ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைவதற்கு முயற்சிப்பார்

232 0

அரசாங்கத்தை கவிழ்த்து எதிர்காலத்தில் விமல் வீரவன்ச ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைவதற்கு முயற்சிப்பார் என மேல்மாகாண முதலமைச்சர் இசுர தேவப்ரிய தெரிவித்துள்ளார்.

கடுவலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிழகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

விமல் வீரவன்சவை வீரமுடையவரென தான் தவறுதலாக எண்ணிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர், தற்போதைய அரசாங்கம் கவிழ்ந்தாலும் கவிழாவிட்டாலும் விமல் வீரசவன்ச ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைவதற்கு முயற்சிப்பார் எனவும் இசுர தேவப்ரிய தெரிவித்துள்ளார்.