வீடொன்று தீப்பிடித்து பெண்ணொருவர் பலி!

206 0

தெனியாய – ஹென்ரட் பிரதேசத்தில் உள்ள வீடொன்று தீப்பிடித்ததில் அங்கு இருந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இவ்வாறு உயிரிழந்துள்ளவர் குறித்த வீட்டில் வாடகைக்கு வசித்த 60 வயதான பெண்ணொருவர் என தெனியாய காவற்துறை தெரிவித்துள்ளது.

காவற்துறைக்கு கிடைத்த தகவலை அடுத்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலதிக தகவல் தெரியவராத நிலையில், இன்று காலை சடலம் தொடர்பான நீதவான் விசாரணை இடம்பெறவுள்ளது.