பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது

215 0

கம்பஹா பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை கனெமுல்ல பிரதேசத்தில் வைத்து இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடமிருந்து டி-56 ரக துப்பாக்கியொன்றும், 51 ரவைகளும் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 8 ஆம் திகதி கம்பஹா – கிரிந்திவிட பிரதேசத்தில் உடுகம்பொல திசை நோக்கி ஜீப் வண்டியில் பயணித்த வர்த்தகர் ஒருவர் மீது மோட்டார் வாகனத்தில் வந்த சிலர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதில் ஜீப் வண்டியில் பின்னால் அமர்ந்திருந்த நபரொருவர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.