மொரட்டுவையில் வீடு உடைத்து திருட்டு ; மூவர் கைது!

11 0

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இரவு மொரட்டுவை பிரதேசத்தில் வீடொன்றை உடைத்து 41 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்களைத் திருடித் தப்பிச்சென்றதாகக் கூறப்படும் மூன்று சந்தேக நபர்கள் மொரட்டுவை பொலிஸாரால் நேற்று (7) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த 23,25 மற்றும் 29 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையில் சந்தேக நபர்களிடமிருந்து 5 கிராம் 720 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் , 5 கிராம் 460 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் , 3 கைக்கடிகாரங்கள் , 2 கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவை பொலிஸாரால் மேற்கொண்டு வருகின்றனர்.