நாட்டின் எதிர்கால சந்ததியினரை மது பாவனையில் இருந்து மீட்க அரசாங்கம் ஆரம்பித்துள்ள செயற்திட்டத்திற்கு சிறந்த பலன் – ஜனாதிபதி

243 0

நாட்டின் எதிர்கால சந்ததியினரை மது பாவனையில் இருந்து மீட்பதற்காக அரசாங்கம் ஆரம்பித்துள்ள செயற்திட்டத்திற்கு சிறந்த பிரதிபலன் கிடைக்க பெற்றுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கண்டி – தெல்தெனிய மாவட்ட மருத்துவமனையின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய மதுபானம் மற்றும் புகைப்பொருட்களில் கிடைக்க பெறும் வரும் வருமானம் வரலாற்றில் முதற்தடவையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது வரவேற்கதக்க விடயம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் சுகாதாரம் தொடர்பான சிறந்த பெறுபேற்றை இது எடுத்துகாட்டுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கல்விமான்கள் மற்றும் சிறந்த ஆரோக்கியத்தை கொண்டவர்கள் வாழும் நாடடொன்று விரைவில் முன்னேற்றம் அடையும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.