தந்தையை கொன்ற புதல்வர்கள் தலைமறைவு

301 0

crime-scane-1021x580அனுராதபுரம் – கெபித்திகொல்லேவ பிரதேசத்தில் தந்தை ஒவரை கொலை செய்த புதல்வர்கள் இருவரை தேடி காவல்துறையினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
கடந்த 22ஆம் திகதி  தாக்குதலுக்குள்ளான தந்தை பதவிய மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.
உந்துருளியில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவித்தே அவர்  பதவிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் அனுராதப்புர மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்தநிலையில் அவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளின் போது அவர் தலையில் தாக்கப்பட்டமையினாலேயே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் தனது மனைவியை தொடர்ந்தும் துன்புறுத்தி வந்ததாகவும் இதன்காரணமாகவே அவர் தனது புதல்வர்களால் தாக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் பதவிய காவல்நிலையத்;தில் பணிப்புரிந்து வந்த காவற்துறை அதிகாரி என தெரிவிக்கப்படுகிறது.