தடுப்பு முகாமிலிருந்து தப்பிச் சென்ற எகிப்தியர் கண்டியில் கைது!

13 0

வீசா இன்றி காணப்பட்ட எகிப்திய பிரஜையொருவர் குடிவரவு – குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு  தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாட்டை விட்டு இவரை வெளியேற்றும் வரை தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 13ஆம் திகதி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு,  தப்பிச் சென்ற எகிப்தியர் கண்டி பிரதேசத்தில் உள்ள ஏ. ஏ. தர்மசேன மாவத்தையில் அமைந்துள்ள விடுதியொன்றில் தங்கியுள்ளதாக குடிவரவு – குடியகல்வு  புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.