குற்றச் செயல்களில் ஈடுபட வேனில் சென்ற பாதாள உலக குழுவுடன் தொடர்புடையவர் உட்பட ஐந்து சந்தேக நபர்கள் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு உள்ளிட்ட ஆயுதங்களுடன் மாதம்பே பொலிஸாரால் கைதாகினர்.
குற்றச் செயல்களில் ஈடுபடத் தயாரான இவர்கள் தொடர்பில் மாதம்பை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் பயணித்த வேனை பொலிஸார் சோதனையிட்டபோது 6 கூரிய வாள்கள், 03 நீளமான கைக் கத்திகள், மற்றும் 5,400 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டன.
சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு மாதம்பை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் சந்தேக நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
விசாரணையின்போது , கைது செய்யப்பட்ட 40 வயதுடைய சந்தேக நபர் குற்றப் பத்திரிகையில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளி எனவும் பாதாள உலக குழுவுடன் தொடர்புடையவர் எனவும் தெரியவந்துள்ளது .