எப்போது தேர்தல் வந்தாலும் ஆர்.கே. நகரில் ஜெ.தீபா வெல்வார்

265 0

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் எப்போது நடந்தாலும் ஜெ.தீபா வெல்வார் என எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை தலைமை செய்தி தொடர்பாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை தலைமை செய்தி தொடர்பாளர்கள் சே.பசும் பொன்பாண்டியன், செல்ல ராஜாமணி, தொண்டன் சுப்பிரமணி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற இருந்த நேரத்தில் பல்வேறு சதிகளால் தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்து விட்டது. எப்போது தேர்தல் நடந்தாலும் இளைய புரட்சி தலைவி ஜெ. தீபா வெற்றி பெறுவார். தேர்தலுக்காக உண்ணாமல் உறங்காமல் உழைத்த அனைத்து தொண்டர்களுக்கும் மற்றும் வரவேற்பு கொடுத்த வாக்காளர்களுக்கும் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.