இடைத் தேர்தலுக்காக ஆர்.கே.நகர் தொகுதியில் அறிவிக்கப்பட்ட பொது விடுமுறை ரத்து

245 0

ஆர்.கே. நகர் தொகுதியில் வரும் 12-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பொது விடுமுறை ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

சென்னை ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 12-ம்தேதி ஆர்.கே நகர் தொகுதிக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

வேட்பாளர்களின் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், பணப் பட்டுவாடா புகார்கள் காரணமாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.

இதையடுத்து, ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 12-ம் தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறையானது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான அரசாணையை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இன்று வெளியிட்டுள்ளார்.