ஆங்கில மொழியில் கற்பிக்க 2500 ஆசிரியர் நியமனத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்

155 0

‘அனைவருக்கும்  ஆங்கிலம்’ வேலைத்திட்டத்தின் கீழ்  ஆங்கில மொழியில் கற்பித்தல்களை மேற்கொள்கின்ற  2500 ஆசிரியர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஆங்கில மொழியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்துக்கான பாடங்களை கற்பிப்பதற்காக தற்போது அங்கீகரிக்கப்பட்ட  ஆசிரியர்கள் எண்ணிக்கை 4441 ஆக இருப்பினும், அதற்காக  6500 ஆசிரியர்களின் தேவை  காணப்படுகிறது.

பெரும்பாலான பாடசாலைகளில் தற்போது சேவையில் ஈடுபடுகின்ற ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக நடவடிக்கைகள் திட்டமிட்டு, ஆங்கில மொழி மூலமான கற்பித்தல்கள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளமை, 765 பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட  மதிப்பீட்டின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஆங்கில மொழி மூலமான பாடங்களை கற்பிக்கின்ற 765 பாடசாலைகளின் எண்ணிக்கையை, 2024ஆம் ஆண்டில் 1000 பாடசாலைகளாக அதிகரித்து  ஆசிரியர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக  ஆங்கில மொழி மூலமான பாடங்களை கற்பிக்கின்ற  அனுமதியளிக்கப்பட்ட ஆசிரியர் எண்ணிக்கையை 6500  வரைக்கும் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்காக  ஆங்கில மொழி மூலமான பாடங்களைக் கற்பிக்கின்ற 2500 ஆசிரியர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கும்  ஜனாதிபதியும் கல்வி அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.