மனித பாவனைக்கு உதவாத பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்குக் கிடைத்த தகவலின் பேரில் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் உள்ள தனியார் களஞ்சியசாலைகளில் நேற்று (8) விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்தச் சோதனை நடவடிக்கையில் பண்டிகை தினத்தை முன்னிட்டு சந்தைகளுக்கு விற்பனை செய்யத் தயாராகவிருந்த மனித பாவனைக்கு உதவாத கடலைப் பருப்பு தொகை மற்றும் உற்பத்தி நிலையத்தின் பெயர், காலாவதி திகதி குறிப்பிடப்படாத பல்வேறு உணவுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்தக்களஞ்சியசாலைகளின் தொழிலாளர்கள் மிகவும் அசுத்தமான முறையில் பொருட்களைக் கையாள்வதாகவும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இந்த சோதனை நடவடிக்கையின் போது இக் களஞ்சியசாலைகளின் உரிமையாளர்களுக்கும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாகத் தெரியவந்துள்ளது.

