பூண்டுலோயாவில் மருந்தகமொன்றில் தீ விபத்து!

121 0

பூண்டுலோயா பிரதான நகரில் தனியார் மருத்தகம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று முன்தினம் சனிக்கிழமை (06) இரவு இடம்பெற்றுள்ளது.

மருந்தகத்தில் ஏற்பட்ட மின்னொழுக்கு காரணமாக இந்த   தீ விபத்து இடம் பெற்றிருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரனையின் மூலம் தெரியவருகிறது.

இதன்போது, மருந்தகத்தில் வைக்கப்பட்டிருந்த மருந்துகள் உட்பட பொருட்கள், தளபாடங்களிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் சேத விபரம் இதுவரை தெரியவரவில்லை. எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், தீ விபத்து தொடர்பான காரணங்களை கண்டறியவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவும் பூண்டுலோயா பொலிஸாரும், நுவரெலியா தடயவியல் பிரிவினரும் இணைந்துள்ளனர்