பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்கு உருவாக்கப்பட்ட 20 பேர் கொண்ட விசேட குழுவினரால் நாடளாவிய ரீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (7) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியதாக சந்தேகிக்கப்படும் மேலும் 10 பேர் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கொழும்பு 12 , ஹெட்டிபொல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 34 மற்றும் 35 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இரத்மலானை, கெஸ்பேவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 37 மற்றும் 29 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தின் வடபிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கணேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் முல்லேரியா, கொலன்னாவை , அதுருகிரிய , அங்கொடை மற்றும் இரத்மலானை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 36, 37 , 41 , 33, 23 மற்றும் 52 வயதுடைய ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 26 மற்றும் 44 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் இதுவரை பாதாள உலக குற்றக் கும்பலைச் சேர்ந்த 327 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

