ஆட்சி மாற்றத்தை உறுதி செய்யும் மே தின கூட்டம் – மஹிந்த அணி கூறுகிறது.

235 0

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் மே தின கூட்டத்தை கண்டு, அரசாங்கம் உள்ளுராட்சி மன்ற தேர்தலை மீண்டும் பிற்போடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இதனை தெரிவித்தார்.

ராகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்த வருடத்தில் மூன்று தேர்தல்கள் நடத்த வேண்டியுள்ளது. அவற்றிட்கு அரசாங்கம் பொறுப்பு கூறவேண்டும்.

எவ்வாறாயினும், தேர்தல் நடத்தினாலும் நடத்தாவிட்டாலும், இந்த வருடத்தில் அரசாங்கம் கவிழும் என்பது, தமது மே தின கூட்டத்திற்கு திரளும் மக்கள் கூட்டம் உறுதி செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டார்.