குஜராத் கடல் பகுதியில் மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 18 பேர் கைது

256 0

குஜராத் கடல் பகுதியில் பாகிஸ்தான் கடற்படையினர் இந்திய மீனவர்கள் 18 பேரை கைது செய்தனர். அவர்களுடைய 3 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

குஜராத் மாநிலம் போர்பந்தர், ஓகா, மாங்க்ரோல் ஆகிய பகுதிகளை சேர்ந்த 18 மீனவர்கள் 3 படகுகளில் நேற்றுமுன்தினம் இரவு குஜராத் கடல் பகுதியில், சர்வதேச கடல் எல்லை அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த பாகிஸ்தான் கடற்படையினர் இந்திய மீனவர்களை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவர்களுடைய 3 படகுகளையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.

கடந்த மாதம் குஜராத் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 231 இந்திய மீனவர்களை கைது செய்ததோடு, அவர்களுடைய 40 படகுகளையும் பாகிஸ்தான் கடற்படையினர் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.