தாய்வானில் பூகம்பம் – சுனாமி எச்சரிக்கை

19 0

தாய்வானின் கிழக்கு கடலோர பகுதியை தாக்கியுள்ள பாரியபூகம்பத்தை( 7.2) தொடர்ந்து ஜப்பான் அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

ஜப்பானின் தென்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

தாய்வானின் கிழக்கு நகரமானஹ_வாலியனில் பல கட்டிடங்கள் இடிந்துவீழ்ந்துள்ளதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

டோக்கியோவிலிருந்து தென்பகுதியில் ஆயிரம் மைல்தொலைவில் உள்ள ஒகினாவாவை சுனாமி அலைகள் தாக்ககூடும் என ஜப்பானிய அதிகாரிகள் எச்சரி;த்துள்ளனர்.

மக்களை கடலோரபகுதிகளிற்கு செல்லவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ள அதிகாரிகள் தாழ்நிலப்பகுதிகளில் வசிப்பவர்கள் அங்கிருந்து வெளியேறவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை ஜப்பானின் யொனாகுனி என்ற தீவை சிறிய சுனாமி தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன