பிலிப்பைன்ஸில் வெப்பநிலை அதிகரிப்பினால் பாடசாலைகள் மூடப்பட்டன

11 0

பிலிப்பைன்ஸில் வெப்பநிலை அதிகரிப்பினால் நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

தலைநகர் மணிலாவிலுள்ள டசின் கணக்கான பாடசாலைகள் உட்பட நூற்றுக்கணக்கான பாடசாலைகளில் நேரபடி வகுப்புகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன  கல்வி அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

மணிலாவில் நாளை புதன்கிழமை 43 பாகை செல்சியஸ் வெப்பநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று செவ்வாய்க்கழமை 35.7 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது. அங்கு 1915 மே 17 ஆம் திகதி 38.6 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியமையே சாதனையாக உள்ளது.

புpலிப்பைன்ஸின் பிரதான தீவான லுஸோன், தென் பகுதி தீவானா மின்டானோவா ஆகியவற்றில் பாடசாலைகளில் நேரடி வகுப்புகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அல்லது பாடசாலை நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.