பொருளாதார நெருக்கடியினால் தவறான முடிவெடுத்து ஒருவர் உயிர்மாய்ப்பு!

10 0

திஸ்ஸமஹாராம, ரன்முதுகல  பகுதியில்  கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாழ்ந்து வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்  சில நாட்களுக்கு முன்னர் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மனமுடைந்து அவரது மனைவியிடம் கூறி அழுததாகவும்  பின்னர் இவர் விஷம் அருந்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாகவும் அவரது மனைவி குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் குறித்த பிரதேசத்திலுள்ள சமுர்த்தி உத்தியோகத்தருக்கு தெரியவந்ததை அடுத்து சமுர்த்தி உத்தியோகத்தர் இவரது வீட்டிற்கு விஜயம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர் .

உயிரிழந்தவரின் மனைவியிடம் சமுர்த்தி உத்தியோகத்தர் சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்படுகிறதா?  இல்லையா?  என  வினவியுள்ளதுடன் ஒரு வருடத்திற்கு முன்னர் சமுர்த்தி கொடுப்பனவு நிறுத்த ப்பட்டதாக அவரது மனைவி கூறியுள்ளார்.

அதற்குப் பதிலாக நட்டஈடு வழங்குவதாக அதிகாரிகள் குறிப்பிட்ட போதிலும் இதுவரை அவர்களுக்குக் கொடுப்பனவு எதுவும் கிடைக்கவில்லை எனவும்  அவர் குறிப்பிட்டுள்ளார் .