நுவரெலியாவிலும் சுகாதார ஊழியர்கள், தாதியர்கள் உள்ளிட்டோர் கவனயீர்ப்பு போராட்டம்

11 0

அனைத்து தாதியர்களும் மூன்று மணித்தியாலங்கள் கடமையிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ள நிலையில், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையிலும் இன்று திங்கட்கிழமை (01) மதியம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நுவரெலியா மாவட்ட  வைத்தியசாலையில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களால் வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்தாதியர்களின் எதிர்நோக்கும் சம்பளம் மற்றும் சீருடை கொடுப்பனவு வழங்குதல் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தாதியர்களது பிரச்சனைகள் தொடர்பில் ஜனாதிபதி உடனடியாக தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும் என்று தெரிவித்த அவர்கள் தமது கோரிக்கைகள் தீர்க்கப்படாவிடில் போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தனர்.