கஞ்சாவுடன் சிக்கிய கலால் அதிகாரிகள்! 8 பேர் கைது

11 0

நீர்கொழும்பு மற்றும் சிலாபம் பகுதிகளில் கேரள கஞ்சாவுடன் நான்கு கலால் அதிகாரிகள் உட்பட 08 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

45 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் 8 பேர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட அதிகாரிகள் பயணித்த கலால் திணைக்களத்திற்குச் சொந்தமான வேன் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.