போதுமானளவு அத்தியாவசிய சந்தையில்

235 0

பண்டிகைக் காலத்திற்கு போதுமான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சந்தையில் இருப்பதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
இக்காலப்பகுதியில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தொடர்பில் எந்தவித பிரச்சினையும் இல்லை. பொருட்களின் விலைகள் கடந்த வாரத்திலும் பார்க்க இந்த வாரம் குறைந்த அளவில் காணப்படுகின்றன.

நாடு முழுவதிலும் உள்ள 225 மொத்த வர்த்த்கர்கள் மூலம் தேவையான உணவுப் பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக குறித்த சங்கத்தின் ஊடக பேச்சாளர் ஹேமக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.