பேராதனை பல்கலைக்கழகத்தை மீண்டும் திறக்க நடவடிக்கை

347 0

மாண­வர்கள்  மத்­தியில் ஒரு­வித வைரஸ் நோய் பர­வி­யதன் கார­ண­மாக சில தினங்­க­ளுக்கு முன்னர் மூடப்­பட்ட பேரா­தனை பல்­க­லைக்­க­ழகம் எதிர்­வரும் தமிழ் – சிங்­கள புது­வ­ருட  பண்­டி­கையின் பின்னர் மீண்டும்  திறப் ­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக பேரா­தனை பல்­க­லைக்­க­ழக உப­வேந்தர் கலா­நிதி உபுல் திஸா­நா­யக்க தெரி­வித்­துள்ளார். 

கடந்த  மூன்றாம் திகதி மாண­வர்கள் மத்­தியில் ஒரு­வித வைரஸ்  காய்ச்சல் பர­வி­யதால் சுமார் 1000 க்கும் அதி­க மான மாண­வர்கள் பல்­க­லைக்­க­ழக மத் ­திய வைத்­திய நிலை­யத்­திலும், பேரா­ தனை போதனா வைத்­தி­ய­சா­லையி லும் சிகிச்சைப் பெற்று வெளி­யே­றினர்.

இதன் கார­ண­மாக பல்­க­லைக்­க­ழக  நிர்­வாகம்  மூன்றாம் திகதி நண்­ப­க­லுடன் கல்வி நட­வ­டிக்­கை­களை இடை­நி­றுத்­தி­ய­துடன், 04 ஆம் திகதி முதல் மறு அறி­வித்தல் வரை பல்­க­லைக்­க­ழகம் மூடப்­பட்­ட­துடன் அன்­றைய தினம் பகல் 12 மணிக்கு  முன்னர் மாண­வர்கள் தங்கள் விடு­தி­க­ளி­லி­ருந்து  வெளி­யே­றி­விட வேண்டும் என்றும்  அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இவ்­வாறு  மூடப்­பட்ட பல்­க­லைக் ­க­ழக  கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக மீண்டும் எதிர்­வரும் தமிழ் – சிங்­கள  பண்­டி­ கையின் பின்னர் திறக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வருவதாகவும் இது குறித்து மாணவர்களுக்கு பின்னர் அறி விக்கப்படும் எனவும் உபவேந்தர் கலாநிதி உபுல் திஸாநாயக்க தெரிவித்துள் ளார்.